×

ஜாலியாக இருந்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பு; இன்ஸ்டாகிராம் காதலன் வீட்டில் நியாயம் கேட்டு போராடிய காதலி: திருவள்ளூர் அருகே பரபரப்பு

திருவள்ளூர்: விடுதிக்கு அழைத்துச்சென்று ஜாலியாக இருந்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த இன்ஸ்டாகிராம் காதலன் வீட்டில் நியாயம் கேட்டு காதலி போராடியதால் பெரும் பரபரப்பு நிலவியது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் 23 வயது பெண். இவருக்கும் திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்த அக்‌ஷய்குமார் (28) என்பருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது.

இருவரும் அடிக்கடி தங்களது ஆசைகளை பரிமாறிக்கொண்டு காதலை வளர்த்துவந்துள்ளனர். இதன்காரணமாக சில தினங்களுக்கு முன் இரண்டு பேரும் திருப்பதிக்கு சென்றுள்ளனர். பின்னர் அங்குள்ள விடுதியில் தங்கி ஜாலியாக இருந்துள்ளதாக தெரிகிறது. அப்போது அந்த இளம்பெண்,’’என்னை நீங்கள் திருமணம் செய்துகொள்ளவேண்டும்’ என கேட்டுள்ளார். அதற்கு அக்‌ஷய்குமார், ‘’உன்னுடன் ஜாலியாகத்தான் இருக்க முடியும். திருமணம் செய்ய முடியாது’ என்று கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண், ஈக்காடு கிராமத்தில் உள்ள காதலன் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த அக்‌ஷய்குமார், தனது கையில் வைத்திருந்த சாவியால் காதலியை தாக்கியதுடன் அவரை தள்ளிவிட்டு அங்கு கிடந்த பெரிய கல்லை எடுத்து தலையில் போட்டு கொலை செய்து விடுவேன்’ என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பயந்துபோன நந்தினி, புல்லரம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து அக்‌ஷய்குமாரை கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post ஜாலியாக இருந்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பு; இன்ஸ்டாகிராம் காதலன் வீட்டில் நியாயம் கேட்டு போராடிய காதலி: திருவள்ளூர் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Instagram ,Tiruvallur ,Thiruvallur ,Bengaluru, Karnataka ,Tiruvallur district ,Ekkadu ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சி தலைவர் உயிரிழப்பு